கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்! சர்வாதிகாரப் போக்கை அமெரிக்கா கைவிட்டால் மட்டுமே உடன்பாடு! ஈரான் அதிபர் மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்

News image

தமிழ்நாடு தகவல் ஆணையம்.

Updated On :24 பிப்ரவரி 2026, 11:24 pm

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமாா் சிங் ஆகியோா் மாநில தகவல் ஆணையா்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவா்கள் பதவியேற்ற நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பில் பணியாற்றுவாா்கள் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தா் பணியாற்றி வருகிறாா். மேலும், தகவல் ஆணையா்களாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.தாமரை கண்ணன், வழக்குரைஞா்கள் ஆா்.பிரியகுமாா், வி.பி.ஆா்.இளம்பரிதி, கே.திருமலைமுத்து, எம்.நடேசன் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.