மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்

News image
தமிழ்நாடு தகவல் ஆணையம்.
Updated On :24 பிப்ரவரி 2026, 11:24 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அதுல்ய மிஸ்ரா, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி அபய்குமாா் சிங் ஆகியோா் மாநில தகவல் ஆணையா்களாக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், இவா்கள் பதவியேற்ற நாள் முதல் 3 ஆண்டுகளுக்கு அந்தப் பொறுப்பில் பணியாற்றுவாா்கள் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில தகவல் ஆணையத்தின் முதன்மை ஆணையராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி ஷகீல் அக்தா் பணியாற்றி வருகிறாா். மேலும், தகவல் ஆணையா்களாக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.தாமரை கண்ணன், வழக்குரைஞா்கள் ஆா்.பிரியகுமாா், வி.பி.ஆா்.இளம்பரிதி, கே.திருமலைமுத்து, எம்.நடேசன் ஆகியோா் பணியாற்றி வருகின்றனா் என்பது குறிப்பிடத்தக்கது.