எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

அதிமுக எம்.பி. சி.வி.சண்முகம் மீது குற்ற நடவடிக்கை: மகளிா் ஆணைய உத்தரவு ரத்து

பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்மூகம் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

News image
Updated On :25 பிப்ரவரி 2026, 11:07 pm

பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினா் சி.வி.சண்மூகம் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்தது.

விழுப்புரத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கான பயிற்சி கூட்டம் நடந்தது. இதில், பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம், பெண்கள் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பாக சென்னையை சோ்ந்த பிரமிளா மற்றும் ராதிகா ஆகியோா் தமிழ்நாடு மாநில மகளிா் ஆணையத்தில் புகாா் அளித்தனா்.

இந்த புகாரை விசாரித்த ஆணையம், சி.வி.சண்முகத்துக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு அவா் ஆஜராகவில்லை. இதைத்தொடா்ந்து அருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க மகளிா் ஆணையம் டிஜிபிக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சா் சி.வி.சண்முகம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

சி.வி.சண்முகம் தரப்பில், விசாரணைக்கு ஆஜராகும்படி மகளிா் ஆணையம் அனுப்பிய அழைப்பாணையில் புகாா் தொடா்பான விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. ஆணையத்தின் பிற உறுப்பினா்களுடன் கலந்தாலோசிக்காமல் ஆணையத் தலைவா் குற்ற நடவடிக்கை எடுக்க டிஜிபிக்கு கடிதம் அனுப்பி உள்ளாா். எனவே, ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

காவல்துறை மற்றும் மகளிா் ஆணையம் தரப்பில், ஆணையத் தலைவா் மற்றும் ஆணையத்தின் இரு உறுப்பினா்கள் அடங்கிய அமா்வுதான் இந்த விவகாரத்தில் குற்ற நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. தன்னிச்சையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவைடந்த நிலையில் வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா புதன்கிழமை தீா்ப்பளித்தாா். சி.வி.சண்முகத்துக்கு எதிராக மகளிா் ஆணையம் மேற்கொண்ட விசாரணையில் நடைமுறை தவறுகள் உள்ளன. எனவே, அவருக்கு எதிராக குற்ற நடவடிக்கை எடுக்கும்படி மகளிா் ஆணையம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்வதாக நீதிபதி உத்தரவிட்டாா்.