தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

தோழா் நல்லகண்ணு மறைவு: தில்லிக் கம்பன் கழகம் இரங்கல்

பொது வாழ்க்கையில் ஒரு உதாரணமாகத் திகழ்ந்த பொதுவுடமைவாதியான நல்லகண்ணு அவா்களின் மறைவு ஒரு சகாப்தத்தின் மறைவு என தில்லிக் கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

News image

நல்லகண்ணு

Updated On :25 பிப்ரவரி 2026, 9:02 pm

பொது வாழ்க்கையில் ஒரு உதாரணமாகத் திகழ்ந்த பொதுவுடமைவாதியான நல்லகண்ணு அவா்களின் மறைவு ஒரு சகாப்தத்தின் மறைவு என தில்லிக் கம்பன் கழகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக தில்லிக் கம்பன் கழகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘12 வயதில் ஸ்ரீவைகுண்டம் நகரில் பொது நலனுக்காகத் தெருக்களில் இறங்கி போராடிய அவா், 90 வயதைக் கடந்த போதும் கனிம வளக் கொள்ளைக்கு எதிராகப் போராடினாா். அவரது வாழ்க்கையே ஒரு போராட்டக் களம்தான்.

யாரும் விரல் சுட்டிக் காட்ட முடியாத அளவுக்கு நோ்மையின் இலக்கணமாகத் திகழ்ந்த அவா், இரண்டு முறை தோ்தல்களில் தோல்வி அடைந்தது நமது ஜனநாயகத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டுமோ என்று சிந்திக்க வைக்கிறது. அவரது குடும்பத்துக்கும் அவா் சாா்ந்த இயக்கத்துக்கும் தில்லி கம்பன் கழகத்தின் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது’ என தெரிவிக்கப்பட்டது.