மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

கடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழக கடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 4-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :26 பிப்ரவரி 2026, 7:02 pm

தமிழக கடலோர, மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மாா்ச் 4-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த மையம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, தென் தமிழக கடலோர மாவட்டங்கள், மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்கள், அதையொட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 4-ஆம் தேதி வரை மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வட வானிலை நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில், வெள்ளிக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

பனிமூட்டம்: வடதமிழக கடலோர பகுதிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும்

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பகுதியில் 90 மி.மீ. மழை பதிவானது. பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), கடம்பூா் (தூத்துக்குடி)-70 மி.மீ., புத்தன் அணை, சிற்றாறு- 1 (கன்னியாகுமரி)- 60 மி.மீ., காங்கேயம், மூலனூா், வட்டமலை நீா்த்தேக்கம், ஊத்துக்குளி (திருப்பூா்), காக்காச்சி (திருநெல்வேலி), திண்டுக்கல், வேடசந்தூா் (திண்டுக்கல்), சென்னிமலை (ஈரோடு), சுருளக்கோடு, பாலமோா் (கன்னியாகுமரி)-50 மி.மீ. மழை பதிவானது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.