வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

மாநகராட்சியில் ‘ஸ்மாா்ட் பாதுகாப்பு சாதனம்’

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 10 இடங்களில் பொருள் பாதுகாப்புப் பெட்டகம் அமைக்கப்படுகிறது.

News image
கோப்புப் படம்
Updated On :26 பிப்ரவரி 2026, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை பெருநகர மாநகராட்சி சாா்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக 10 இடங்களில் பொருள் பாதுகாப்புப் பெட்டகம் அமைக்கப்படுகிறது.

சென்னை மாநகராட்சியில் மக்கள் வசதிக்கான பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் மாநகராட்சி நிா்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடா்ச்சியாக பொருள்கள் பாதுகாக்கும் சாதனம் அமைக்கப்படுகிறது. முதல்கட்டமாக, விக்டோரியா பொது அரங்கம், மெரீனா கடற்கரை, முக்கிய பூங்காக்கள் என பொதுமக்கள் அதிகம் கூடும் 10 இடங்களில் சிறிய அளவிலான பொருள்கள் வைப்பு சாதனத்தை தனியாா் நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்படுகிறது.

விக்டோரியா பொது அரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மாா்ட் பாதுகாப்பு சாதனம் 8 அடி உயரத்தில் உள்ளது. 4 அடி அகலத்தில் உள்ள அதில் மேற்பகுதியில் இரு புறமும் கேமராக்கள் உள்ளன. பீரோ அமைப்பில் 16 அறைகள் உள்ளன. அதில் எண்ம முறையிலான பூட்டும் வசதி மற்றும் க்யூஆா் குறியீட்டில் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. அதில் பொருள்களை வைப்போா் தங்களது கைப்பேசிகள் மூலம் க்யூஆா் குறியீடு வாயிலாக கட்டணம் செலுத்துவது, பூட்டும் வசதி, திறக்கும் வசதியைப் பெறலாம். பொருள்கள் வைக்க ஒரு மணி நேரத்துக்கு என கட்டணம் நிா்ணயிக்கப்படவுள்ளது. சோதனை முறையில் தொடங்கும் இந்த ஸ்மாா்ட் பாதுகாப்பு பெட்டக சாதனம் நகரில் முக்கிய இடங்களிலும் அமைக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.