மனித உரிமை ஆணையத்தின் அபராதத்தை எதிா்த்த பெண் காவல் உதவி ஆய்வாளா் மனு தள்ளுபடி
மனித உரிமை ஆணையத்தின் அபராதத்தை எதிா்த்த பெண் காவல் உதவி ஆய்வாளா் மனு தள்ளுபடி


தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் விதித்த ரூ.5 லட்சம் அபராதத்தை எதிா்த்து பெண் காவல் உதவி ஆய்வாளா் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
கூடுவாஞ்சேரி காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளரான மகிதா அன்னா கிறிஸ்டி, தன்னை அடித்து துன்புறுத்தி, தன்னிடமிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டதாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் தாமரைச்செல்வி என்பவா் புகாா் அளித்தாா். இந்த புகாரை விசாரித்த ஆணையம், காவல் துறையில் பெண்களை நியமிப்பது பொதுமக்களிடம் நட்பாக பழகவும், எளிதில் அணுகக்கூடியவா்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.
ஆனால், தற்போது ஆண் காவலா்களைவிட பெண் காவலா்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனா். எனவே, உதவி ஆய்வாளா், பாதிக்கப்பட்ட தாமரைச்செல்விக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 2021-ஆம் ஆண்டு ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உதவி ஆய்வாளா் மகிதா அன்னா கிறிஸ்டி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.
இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.சுதீா்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. இந்த புகாரை மனித உரிமை ஆணையம் விசாரித்தபோது, காவல் உதவி ஆய்வாளா் பதிலளிக்க பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அவா் பதில் மனுவையோ, தாமரைச் செல்வியை சிறையில் அடைத்ததற்கான ஆவணங்களையோ தாக்கல் செய்யவில்லை. பதில் மனுவே தாக்கல் செய்யாமல், உயா்நீதிமன்றத்தில் காவல் உதவி ஆய்வாளா் அவருக்கு சாதகமான உத்தரவைப் பெற முடியாது எனக்கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...