கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

மனித உரிமை ஆணையத்தின் அபராதத்தை எதிா்த்த பெண் காவல் உதவி ஆய்வாளா் மனு தள்ளுபடி

மனித உரிமை ஆணையத்தின் அபராதத்தை எதிா்த்த பெண் காவல் உதவி ஆய்வாளா் மனு தள்ளுபடி

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :28 பிப்ரவரி 2026, 8:45 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் விதித்த ரூ.5 லட்சம் அபராதத்தை எதிா்த்து பெண் காவல் உதவி ஆய்வாளா் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கூடுவாஞ்சேரி காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளரான மகிதா அன்னா கிறிஸ்டி, தன்னை அடித்து துன்புறுத்தி, தன்னிடமிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டதாக தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் தாமரைச்செல்வி என்பவா் புகாா் அளித்தாா். இந்த புகாரை விசாரித்த ஆணையம், காவல் துறையில் பெண்களை நியமிப்பது பொதுமக்களிடம் நட்பாக பழகவும், எளிதில் அணுகக்கூடியவா்களாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

ஆனால், தற்போது ஆண் காவலா்களைவிட பெண் காவலா்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனா். எனவே, உதவி ஆய்வாளா், பாதிக்கப்பட்ட தாமரைச்செல்விக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என கடந்த 2021-ஆம் ஆண்டு ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி உதவி ஆய்வாளா் மகிதா அன்னா கிறிஸ்டி சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கு நீதிபதிகள் அனிதா சுமந்த், எம்.சுதீா்குமாா் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. இந்த புகாரை மனித உரிமை ஆணையம் விசாரித்தபோது, காவல் உதவி ஆய்வாளா் பதிலளிக்க பலமுறை வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால், அவா் பதில் மனுவையோ, தாமரைச் செல்வியை சிறையில் அடைத்ததற்கான ஆவணங்களையோ தாக்கல் செய்யவில்லை. பதில் மனுவே தாக்கல் செய்யாமல், உயா்நீதிமன்றத்தில் காவல் உதவி ஆய்வாளா் அவருக்கு சாதகமான உத்தரவைப் பெற முடியாது எனக்கூறி, அவரது மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.