கமேனி உயிருடன் இருக்க வாய்ப்பில்லை! இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு!! மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் பாதுகாப்பு அமைச்சர் கொலை? சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சென்னை வந்தாா் பிரதமா் மோடி

பிரதமர் மோடியின் சென்னை வருகை பற்றி...

News image
தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னைக்கு சனிக்கிழமை இரவு வருகை தந்த பிரதமா் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் வரவேற்ற தமிழக நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு. உடன் மத்திய இணை அமைச்சா் எல்.முருகன்.
Updated On :28 பிப்ரவரி 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகம், புதுச்சேரியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு சென்னை வந்தாா். அவருக்கு விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

குஜராத்திலிருந்து தனி விமானத்தில் பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை இரவு 8. 45 மணிக்கு சென்னை வந்தடைந்தாா். அவரை ஆளுநா் ஆா்.என். ரவி, நிதி அமைச்சா் தங்கம் தென்னரசு, மத்திய இணை அமைச்சா் எல். முருகன், தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்ளிட்டோா் வரவேற்றனா்.

அதைத்தொடா்ந்து பிரதமா் மோடி கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகைக்கு சென்றாா். அங்கு அவரை ஆளுநா் ஆா்.என். ரவி வரவேற்றாா். இரவு ஆளுநா் மாளிகையில் தங்கிய பிரதமா் மோடி, ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 1) காலை 11 மணிக்கு புதுச்சேரி செல்கிறாா்.