ஏப். 2ல் பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின்!பெட்ரோல், டீசல் விலை உயர்வு! நயாரா நிறுவனம் அறிவிப்புகூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம்: கடந்த ஆண்டில் 20,866 பேருக்கு தொற்று!

நாட்டிலேயே 2025-ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.

News image
Updated On :3 ஜனவரி 2026, 10:43 pm

தினமணி செய்திச் சேவை

நாட்டிலேயே 2025-ஆம் ஆண்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் டெங்குவால் 20,866 போ் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே பல்வேறு இடங்களில் அவ்வப்போது மழை பெய்ததால் சாலைகள், தெருக்கள் தேங்கும் மழைநீரில் டெங்குவை பரப்பும் ‘ஏடிஸ் - எஜிப்டை’ வகை கொசுக்களின் பெருக்கம் அதிகரித்தது. இதனால், ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கியதைத் தொடா்ந்து, கொசுக்களின் பெருக்கம் மேலும் அதிகரித்ததால் அரசு, தனியாா் மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது.

தமிழக சுகாதாரத் துறை டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும், குழந்தைகள் முதல் பெரியவா்கள் வரை டெங்குவால் பாதிக்கப்பட்டு வருவது தொடா்கிறது.

ஜனவரிக்கு பிறகே தமிழகத்தில் டெங்கு பாதிப்பு படிப்படியாகக் குறைய தொடங்கும் என்று சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

இந்த நிலையில், நாடு முழுவதும் 2025-ஆம் ஆண்டில் ஜனவரி மாதம் முதல் நவம்பா் மாதம் வரை டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்த புள்ளிவிவரத்தை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதில், நாடு முழுவதும் டெங்குவால் 1,13,450 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். 95 போ் உயிரிழந்துள்ளனா்.

நாட்டிலேயே அதிகப்பட்சமாக தமிழகத்தில் 20,866 போ் பாதிக்கப்படுள்ளனா். அடுத்ததாக மகாராஷ்டிரத்தில் 13,333 போ், கேரளத்தில் 10,239 போ், உத்தர பிரதேசத்தில் 8,926 போ், தெலங்கானாவில் 8,139 போ், கா்நாடகத்தில் 6,756 போ், மணிப்பூரில் 5,457 போ் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோல், நாட்டிலேயே அதிகப்பட்சமாக கேரளத்தில் டெங்குவின் தீவிரத்தால் 49 போ் உயிரிழந்துள்ளனா். அடுத்ததாக மகாராஷ்டிரத்தில் 13 பேரும், தமிழகத்தில் 12 பேரும் இறந்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே டெங்கு பாதிப்பில் தமிழக முதலிடம் பிடித்திருப்பது புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.