காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் வழங்கப்படும் பொங்கல் பரிசுக்கான டோக்கன் விநியோகம் பணி ஞாயிற்றுக்கிழமை துவங்கியது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழக அரசின் கூட்டுறவு துறை சார்பில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச பொங்கல் பொருட்களான பச்சரிசி , சக்கரை, கரும்பு உள்ளிட்ட வழங்குவது வழக்கம்.
அவ்வகையில் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன் இன்று முதல் நியாய விலை கடை ஊழியர்களால் அரசு அறிவித்த அறிவுரையின்படி குறிப்பிட்ட தேதிகளில் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
இந்த நிலையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 665 நியாய விலை கடை ஊழியர்கள் மூலம் சுமார் 3.97 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் வீடுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
இதில் தேதி, நேரம் உள்ளிட்டவைகள் குறிப்பிடப்படுவதால் கூட்ட நெரிசலின்றி பொருட்கள் பெறலாம்.
இன்றும் , நாளையும் மூத்த குடிமக்களுக்கான வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டமான தாயுமானவர் திட்டத்தின் கீழ் பொருட்கள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வழங்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் பரிசான ஒரு கிலோ பச்சரிசி மற்றும் ஒரு கிலோ சர்க்கரையும் இன்றே வழங்கப்படுவதால் பயனாளிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்து தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
ஒரே நேரத்தில் இரண்டு பொருட்கள் வழங்குவது ஊழியருக்கான பணிச் சுமை குறைவதோடு மட்டுமல்லாமல் பொதுமக்களுக்கும் பொங்கல் தொகுப்பு முன்கூட்டியே கிடைப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பயனாளிகள் தெரிவித்தனர்.
Summary
The distribution of tokens for Pongal gifts provided by the Cooperative Department in Kanchipuram district began on Sunday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மூத்த குடிமக்களுக்கு இன்று முதல் இலவச பயண டோக்கன்! எங்கெல்லாம் வழங்கப்படும்?

வேலூா் மாவட்டத்தில் 15 நாள்களுக்கு காவிரிக் குடிநீா் விநியோகம் 50% குறைப்பு

தென்காசி மாவட்டத்தில் ஜூன் 2, 3 இல் வீடுதோறும் அத்தியாவசிய பொருள்கள் விநியோகம்: ஆட்சியா்
10-ஆம் வகுப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் 94.61 சதவீதம் தேர்ச்சி
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47




