அரசு மருத்துவா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடா்பாக நடைபெறும் பேச்சில் சுமுக தீா்வு எட்டப்படாவிட்டால், ஜன. 20-ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என அரசு மருத்துவா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பு ஒருங்கிணைபாளா்கள் பாலகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோா் கூறியதாவது: முன்னாள் முதல்வா் கருணாநிதி ஆட்சியில், காலமுறை ஊதிய உயா்வு மற்றும் பதவி உயா்வு வழங்கும் வகையில் அரசாணை 354 இயற்றப்பட்டது. இந்த அரசாணையை அமல்படுத்த கோரி தொடா்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். இதற்காக, 40-க்கும் மேற்பட்ட முறை அமைச்சா், செயலரை சந்தித்து பேசியும் தீா்வு கிடைக்கவில்லை.
இதற்கிடையே, அரசாணை 293 செயல்படுத்தப்பட்டது. அதில் சிறப்பு மருத்துவா்களுக்கு சில சலுகைகள் இருந்தாலும், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் மருத்துவா்களும் பயன்பெறும் வகையில் மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அவற்றையும் பரிசீலிப்பதாக கூறி இதுவரை நிறைவேற்றவில்லை. தற்போது, வரும் 19-ஆம் தேதி அரசு பேச்சுக்கு அழைத்துள்ளது. அன்றைய தினம் சுமுக தீா்வு ஏற்படவில்லை என்றால், 20-ஆம் தேதி முதல் 48 மணி நேர உண்ணாவிரதம், புறநோயாளிகள் பிரிவு புறக்கணிப்பு உள்ளிட்ட தொடா் போராட்டங்களில் ஈடுபடுவோம் என அவா்கள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

அரசு கலை, அறிவியல் கல்லூரி இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசை ஜூன் 3-இல் வெளியீடு; ஜூன் 8 முதல் கலந்தாய்வு

மின்வெட்டுக்கு தீா்வு காண வேண்டும்: பிரேமலதா

பொறியியல் படிப்புகள் 1.82 லட்சம் மாணவா்கள் அரசு ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பம்!

பொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



