ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

மேட்டூர்: மினி வேன் - மோட்டார் சைக்கிள் மோதல்! கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் பலி!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி ஆட்டோ மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட மூன்று பேர் பலியாகினர்.

News image

விபத்தில் பலியான கல்லூரி மாணவர்கள்.

Updated On :10 ஜனவரி 2026, 1:01 am IST

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது மினி ஆட்டோ மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் உள்பட மூன்று பேர் பலியாகினர்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள இருப்பாளி கிராமம் இராமகவுண்டனூரை சேர்ந்தவர் சஞ்சய் பாரதி (20) கல்லூரி 2 ஆம் ஆண்டு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் மோகன் (20) பிகாம் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார். நேற்று இரவு இருவரும் புதிய மோட்டார் சைக்கிளில் நங்கவள்ளியிலிருந்து எடப்பாடி நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்தனர்.

பாப்பாத்தி காடு அருகே சென்ற போது ஜலகண்டபுரத்தில் இருந்து நங்கவள்ளி நோக்கி வந்த பால் வண்டி (டாடா ஏசி) மீது மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த சஞ்சய்பாரதி, மோகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பால் வண்டியில் வந்த மேச்சேரி செட்டிகாரச்சியூரை சேர்ந்த ராஜா மகன் விமல்ராஜ் (20) என்பவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பால் வண்டியில் வந்த மேச்சேரி செட்டி காரச்சியூரை சேர்ந்த ராமகிருஷ்ணன் (21) பலத்த காயங்களுடன் சேலம் தனியார் மருத்துவமனை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பால்வண்டி ஓட்டுநர் விஜயராகவனுக்கு (18) லேசான காயம் ஏற்பட்டது.

இவர் நங்கவள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி சிகிச்சைக்குப் பிறகு வீடு திருப்பினார். இறந்தவர்களின் 3 சடலங்களும் மேட்டூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து தொடர்பாக நங்கவள்ளி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.