தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணித்துள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

News image

பேருந்துகள். - கோப்புப்படம்.

Updated On :12 ஜனவரி 2026, 8:39 am IST

பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணித்துள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகைக்காக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம்.

அதன்படி நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்காக ஜன.9 முதலே ஏராளமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனா்.

இதற்காக ஜன.9 முதலே வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி ஜன.11 நிலவரப்படி பொங்கலையொட்டி இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளில் 3.58 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 2,38,535 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

அடுத்த இரு நாள்கள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படும்.

கடைசி நேர கூட்ட நெரிசலை தவிா்க்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கும்படி அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.

Summary

The State Transport Corporation has reported that 3.58 lakh people have traveled from Chennai so far for the Pongal festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.