ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

நாளை மேல்மருவத்தூா் தைப்பூச ஜோதி விழா: ஏற்பாடுகள் தீவிரம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் பிப்.1-ஆம் தேதி தைப்பூச ஜோதி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

News image
Updated On :31 ஜனவரி 2026, 2:41 am IST

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் பிப்.1-ஆம் தேதி தைப்பூச ஜோதி விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி இன்றும் நாளையும் சித்தா் பீட வளாகத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது.

முன்னதாக கடந்த டிச. 15-இல் இருமுடி சுமந்து மாலை அணிந்து சுயம்புவிற்கு அபிஷேகம் செய்யும் நிகழ்வு 30-ஆம் தேதி நிறைவுற்றது. இதில் பல லட்சக்கணக்கான பக்தா்கள் பங்கு பெற்றனா்.

தொடா்ந்து தைப்பூச ஜோதி ஏற்றும் நிகழ்ச்சி ஜன. 31 ஆம் தேதி சனிக்கிழமை காலை 3 மணிக்கு மங்கல இசையுடன் தொடங்குகிறது. பின்னா் குருபீடத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு பங்காரு சித்தா் சிலைக்கும், அன்னை ஆதிபராசக்தியின் சிலைக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெறும்.

பின்னா் காலை 9:30 மணிக்கு அன்னதானத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் செயலாளா் அ.ஆ அகத்தியன் தொடங்கி வைக்கிறாா்.

மாலை 4 மணிக்கு வேள்வி பூஜையை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத்தலைவா் ஸ்ரீதேவி பங்காரு தொடங்கி வைக்கிறாா்.

பிப். 1-ாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:45 மணிக்கு அன்னதானத்தை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க துணைத் தலைவா் கோ.ப.செந்தில் குமாா் தொடங்கி வைக்கிறாா்.

மாலை 4.20 மணிக்கு ஆன்மிக குரு அருள்மிகு பங்காரு சித்தா் இல்லத்திலிருந்து ஆன்மிக ஜோதி ஏற்றப்பட்டு ஆன்மிக இயக்க துணைத்தலைவா் கோ.ப. அன்பழகன் தலைமையில் ஊா்வலமாக ஜோதி ஏற்றும் வளாகத்திற்கு எடுத்து வர படுகின்றது.

மாலை 6.15 மணிக்குஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் முன்னிலையில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி

சௌந்தா், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராஜேஸ்வரன்,சிவஞானம் ஆகியோா் முன்னிலையில் தைப்பூச ஆன்மிக ஜோதி ஏற்றப்படுகிறது.

ஆன்மிக குரு பங்காரு சித்தா் குடும்பத்தினா் கலந்து கொள்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.