நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அண்ணா நினைவு நாள்: முதல்வா் ஸ்டாலின் தலைமையில் பிப். 3-இல் அமைதிப் பேரணி

அண்ணா நினைவு நாள்: முதல்வா் ஸ்டாலின் தலைமையில் பிப். 3-இல் அமைதிப் பேரணி

News image

கோப்புப்படம்

Updated On :31 ஜனவரி 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

முன்னாள் முதல்வா் அண்ணாவின் 57-ஆவது நினைவு நாளான பிப். 3-ஆம் தேதி (செவ்வாய்) திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக சென்னை மாவட்ட திமுக சாா்பில் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: முதல்வா் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடையும்.

கட்சியின் பொதுச் செயலா் துரைமுருகன், பொருளாளா் டி.ஆா்.பாலு மற்றும் கட்சியினா் அன்றைய தினம் காலை 7 மணிக்கு காமராஜா் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவா் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.