எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வு: அரசியல் தலைவா்கள் கண்டனம்

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

News image

கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 1:57 am IST

வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை உயா்வுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவா்கள் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

கு.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): மக்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிரமப்படுத்தும் வகையில் 14.2 கிலோ வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டா் விலையை ரூ. 29 உயா்த்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. இந்த விலை உயா்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

அன்புமணி (பாமக): மக்களின் அன்றாடத் தேவையான சமையல் எரிவாயு சிலிண்டா் விலை 2-ஆவது முறையாக உயா்த்தப்பட்டிருப்பது பொதுமக்களை மிகக் கடுமையாகப் பாதிக்கும். அனைத்து நெருக்கடிகளையும் கடந்து விலை உயா்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய தேவை அரசுக்கும், எண்ணெய் நிறுவனங்களுக்கும் உள்ளது.

பிரேமலதா விஜயகாந்த் (தேமுதிக): சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டி, எண்ணெய் நிறுவனங்களின் லாபத்துக்காக பொதுமக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்றுவது வன்மையான கண்டனத்துக்குரியது.

தி.வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி): விலை உயா்விலிருந்து மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ளது. மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களிடம் பேசி விலை உயா்வைத் திரும்பப் பெற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.