கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் விசாரணை!

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் இன்றைய சிபிஐ விசாரணை நிறைவு பெற்றது தொடர்பாக...

News image
சிபிஐ அலுவலகத்தில் செந்தில் பாலாஜி- படம் - எக்ஸ்
Updated On :17 மார்ச் 2026, 11:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் தொடர்பாக தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் இன்று (மார்ச் 17) சிபிஐ விசாரணை நடைபெற்றது. தொடர்ந்து 6 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இன்றைய விசாரணை தற்போது நிறைவு பெற்றது.

சம்பவத்தின்போது ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்ததில் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையதாகக் கூறி விசாரணை நடைபெற்றதாகத் தெரிகிறது.

கரூர் துயரத்துக்கு செந்தில் பாலாஜியே காரணம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் குற்றம் சாட்டியிருந்தார். விஜய்யிடம் நேற்று விசாரணை நடத்திய சிபிஐ, இன்று செந்தில் பாலாஜியிடம் விசாரணை மேற்கொண்டது.

மார்ச் 17-ஆம் தேதி ஆஜராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருந்த நிலையில், விஜய்யிடம் நேற்று முன்தினம் (மார்ச் 15) விசாரணை நடத்தியதைத் தொடர்ந்து, இன்று (மார்ச் 17) செந்தில் பாலாஜியிடம் சிபிஐ விசாரணை மேற்கொண்டது.

கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் கடந்த ஜன. 12, ஜன. 19, மார்ச் 15 ஆகிய தேதிகளில் சிபிஐ அனுப்பிய அழைப்பாணையின்படி தில்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் விஜய் ஆஜராகி வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். சிபிஐ தரப்பில் கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

இந்நிலையில், தற்போது கரூர் தொகுதிக்குட்பட்ட செந்தில் பாலாஜியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. தொடர்ந்து 6 மணிநேரத்திற்கும் மேலாக நடந்த இன்றைய விசாரணை மாலை 5.30 மணியுடன் நிறைவு பெற்றது.

சிபிஐ அலுவலகத்தில் நாளை மீண்டும் செந்தில் பாலாஜி ஆஜராக வேண்டுமா? என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.