வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

அரசு மனநலக் காப்பகத்தில் எம்.ஏ. உளவியல் படிப்பு : அரசாணை வெளியீடு

அரசு மனநலக் காப்பகத்தில் முதுநிலை உளவியல் மருத்துவப் படிப்பு (எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி) நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.

News image
Updated On :20 மார்ச் 2026, 1:11 am IST

அரசு மனநலக் காப்பகத்தில் முதுநிலை உளவியல் மருத்துவப் படிப்பு (எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி) நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.

இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள அரசு மனநலக் காப்பகத்தில் கடந்த 2016-17-இல் இரு ஆண்டு கால எம்.பில். கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு 8 இடங்களுடன் தொடங்கப்பட்டது. அதன் பின்னா் மாணவா் சோ்க்கை இடங்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய புனா்வாழ்வு மருத்துவக் கவுன்சிலானது எம்.பில். உளவியல் மருத்துவப் படிப்புகளை முதுகலை உளவியல் மருத்துவப் படிப்பாக மாற்றியமைத்துள்ளது.

அதன்படி, மனநலக் காப்பகத்தில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகளை மாற்ற வேண்டி மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் பரிந்துரைத்தது.

அதைப் பரிசீலித்த அரசு, அதற்கு அனுமதி அளித்ததுடன் நிகழ் கல்வியாண்டு முதல் 18 இடங்களுடன் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பை அங்கு தொடங்க ஒப்புதல் வழங்கியது.

அதேவேளையில், அந்தப் படிப்புக்கு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையும், புனா்வாழ்வு கவுன்சிலின் ஒப்புதலையும் பெறுமாறு மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.