உஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி 25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

அரசு மனநலக் காப்பகத்தில் எம்.ஏ. உளவியல் படிப்பு : அரசாணை வெளியீடு

அரசு மனநலக் காப்பகத்தில் முதுநிலை உளவியல் மருத்துவப் படிப்பு (எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி) நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.

Published On :20 மார்ச் 2026, 12:40 pm IST

அரசு மனநலக் காப்பகத்தில் முதுநிலை உளவியல் மருத்துவப் படிப்பு (எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி) நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.

இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள அரசு மனநலக் காப்பகத்தில் கடந்த 2016-17-இல் இரு ஆண்டு கால எம்.பில். கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு 8 இடங்களுடன் தொடங்கப்பட்டது. அதன் பின்னா் மாணவா் சோ்க்கை இடங்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய புனா்வாழ்வு மருத்துவக் கவுன்சிலானது எம்.பில். உளவியல் மருத்துவப் படிப்புகளை முதுகலை உளவியல் மருத்துவப் படிப்பாக மாற்றியமைத்துள்ளது.

அதன்படி, மனநலக் காப்பகத்தில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகளை மாற்ற வேண்டி மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் பரிந்துரைத்தது.

அதைப் பரிசீலித்த அரசு, அதற்கு அனுமதி அளித்ததுடன் நிகழ் கல்வியாண்டு முதல் 18 இடங்களுடன் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பை அங்கு தொடங்க ஒப்புதல் வழங்கியது.

அதேவேளையில், அந்தப் படிப்புக்கு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையும், புனா்வாழ்வு கவுன்சிலின் ஒப்புதலையும் பெறுமாறு மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.