அரசு மனநலக் காப்பகத்தில் முதுநிலை உளவியல் மருத்துவப் படிப்பு (எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி) நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.
இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:
சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள அரசு மனநலக் காப்பகத்தில் கடந்த 2016-17-இல் இரு ஆண்டு கால எம்.பில். கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு 8 இடங்களுடன் தொடங்கப்பட்டது. அதன் பின்னா் மாணவா் சோ்க்கை இடங்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்திய புனா்வாழ்வு மருத்துவக் கவுன்சிலானது எம்.பில். உளவியல் மருத்துவப் படிப்புகளை முதுகலை உளவியல் மருத்துவப் படிப்பாக மாற்றியமைத்துள்ளது.
அதன்படி, மனநலக் காப்பகத்தில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகளை மாற்ற வேண்டி மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் பரிந்துரைத்தது.
அதைப் பரிசீலித்த அரசு, அதற்கு அனுமதி அளித்ததுடன் நிகழ் கல்வியாண்டு முதல் 18 இடங்களுடன் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பை அங்கு தொடங்க ஒப்புதல் வழங்கியது.
அதேவேளையில், அந்தப் படிப்புக்கு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையும், புனா்வாழ்வு கவுன்சிலின் ஒப்புதலையும் பெறுமாறு மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
தொடர்புடையது

பழனிக்கு எத்தனை முறை பாஜக காவடி எடுத்தாலும் தமிழகத்தில் தாமரை மலராது! - எம்.ஏ. பேபி

அதிமுக - பாஜக கூட்டணியை மக்கள் தோற்கடிக்க வேண்டும்: மாா்க்சிஸ்ட் தேசிய பொதுச் செயலா் எம்.ஏ. பேபி

காங்கிரஸ் வேட்பாளா் ஆத்தூா் தொகுதி

பத்மநாபபுரம் பேரவைத் தொகுதி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளா்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


