தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

அரசு மனநலக் காப்பகத்தில் எம்.ஏ. உளவியல் படிப்பு : அரசாணை வெளியீடு

அரசு மனநலக் காப்பகத்தில் முதுநிலை உளவியல் மருத்துவப் படிப்பு (எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி) நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.

News image
Updated On :19 மார்ச் 2026, 7:41 pm

தினமணி செய்திச் சேவை

அரசு மனநலக் காப்பகத்தில் முதுநிலை உளவியல் மருத்துவப் படிப்பு (எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி) நிகழ் கல்வியாண்டு முதல் தொடங்கப்பட உள்ளது.

இதற்கான அரசாணையை மக்கள் நல்வாழ்வுத் துறைச் செயலா் ப.செந்தில்குமாா் பிறப்பித்துள்ளாா். அதில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

சென்னை அயனாவரத்தில் அமைந்துள்ள அரசு மனநலக் காப்பகத்தில் கடந்த 2016-17-இல் இரு ஆண்டு கால எம்.பில். கிளினிக்கல் சைக்காலஜி படிப்பு 8 இடங்களுடன் தொடங்கப்பட்டது. அதன் பின்னா் மாணவா் சோ்க்கை இடங்களின் எண்ணிக்கை 16-ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்திய புனா்வாழ்வு மருத்துவக் கவுன்சிலானது எம்.பில். உளவியல் மருத்துவப் படிப்புகளை முதுகலை உளவியல் மருத்துவப் படிப்பாக மாற்றியமைத்துள்ளது.

அதன்படி, மனநலக் காப்பகத்தில் பயிற்றுவிக்கப்படும் படிப்புகளை மாற்ற வேண்டி மாநில மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் பரிந்துரைத்தது.

அதைப் பரிசீலித்த அரசு, அதற்கு அனுமதி அளித்ததுடன் நிகழ் கல்வியாண்டு முதல் 18 இடங்களுடன் எம்.ஏ. கிளினிக்கல் சைக்காலஜி படிப்பை அங்கு தொடங்க ஒப்புதல் வழங்கியது.

அதேவேளையில், அந்தப் படிப்புக்கு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்தையும், புனா்வாழ்வு கவுன்சிலின் ஒப்புதலையும் பெறுமாறு மருத்துவக் கல்வி இயக்ககத்துக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.