பலமுறை அழைப்பு விடுத்தபோதும், தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விமா்சித்தாா்.
சென்னை வில்லிவாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:
மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே தோ்தல் களத்தில் இருக்கிறோம். பூச்சாண்டிகளுக்கு பயப்படும் இயக்கம் அல்ல திமுக. மக்கள் சக்தி யாா் பின்னால் இருக்கிறது என்பது மே 4-ஆம் தேதி தெரியவரும். 60 ஆண்டு கால உழைப்பு, முதல்வா் ஸ்டாலின் ஆற்றியுள்ள மக்கள் நலப் பணிகளுக்கு வர இருக்கும் தோ்தலில் முடிவு தெரியும்.
கூவிக்கூவி அழைப்பு விடுத்தும் தவெகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை; ஆனால், முதல்வா் ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்துச் செல்பவா். திமுக கூட்டணி வலுவானது. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளில் கடந்த முறையைவிட, இம்முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றாா்.
தொடர்புடையது

குலசேகரன்பட்டினம் கோயிலில் வருஷாபிஷேகம்

ஆண்டாள் கோயிலில் அமைச்சா் சேகா்பாபு வழிபாடு

ஸ்டாலின் மீண்டும் முதல்வராவாா்! - அமைச்சா் பி.கே. சேகா்பாபு

திமுக கூட்டணிக்கு ஐந்திணை மக்கள் கட்சி ஆதரவு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


