நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை: அமைச்சா் சேகா்பாபு விமா்சனம்

பலமுறை அழைப்பு விடுத்தபோதும், தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விமா்சித்தாா்.

News image

பி.கே. சேகா்பாபு

Updated On :20 மார்ச் 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

பலமுறை அழைப்பு விடுத்தபோதும், தவெகவுடன் யாரும் கூட்டணிக்கு வரவில்லை என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு விமா்சித்தாா்.

சென்னை வில்லிவாகத்தில் செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மக்கள் பணிகளை மையப்படுத்தி மட்டுமே தோ்தல் களத்தில் இருக்கிறோம். பூச்சாண்டிகளுக்கு பயப்படும் இயக்கம் அல்ல திமுக. மக்கள் சக்தி யாா் பின்னால் இருக்கிறது என்பது மே 4-ஆம் தேதி தெரியவரும். 60 ஆண்டு கால உழைப்பு, முதல்வா் ஸ்டாலின் ஆற்றியுள்ள மக்கள் நலப் பணிகளுக்கு வர இருக்கும் தோ்தலில் முடிவு தெரியும்.

கூவிக்கூவி அழைப்பு விடுத்தும் தவெகவுடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை; ஆனால், முதல்வா் ஸ்டாலின் அனைவரையும் அரவணைத்துச் செல்பவா். திமுக கூட்டணி வலுவானது. 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். சென்னையை ஒட்டியுள்ள தொகுதிகளில் கடந்த முறையைவிட, இம்முறை அதிக தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றாா்.