கேரளத்தில் வாக்காளர் பட்டியலில் இணைக்க மார்ச் 15 வரை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் மட்டுமே பரிசீலனை!புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடுசர்வதேச பயங்கரவாதத்தில் முதல்முறையாக பாகிஸ்தான் முதலிடம்! 2025-ல் 1,139 பேர் பலிபாஜகவில் இணைந்த சிபிஎம் தலைவர் ஸ்மிதா சுந்தரேசன்!விசிகவுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் எவை? நாளை உயர்நிலை ஆலோசனை!நாளை தேமுதிக மாவட்ட செயலர்கள் கூட்டம் ஆந்திரம்: கலப்பட பால் விவகாரம் - இறப்பு எண்ணிக்கை 16-ஆக உயர்வு!6 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருக்கிறோம்: மார்க்சிய கம்யூனிஸ்ட் 8,931 நாள்கள் சாதனை! பிரதமர் மோடிக்கு ராஜ்நாத் சிங் வாழ்த்துபுதுச்சேரி அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!எரிபொருள் தட்டுப்பாடு: பிரதமர் மோடி தலைமையில் அமைச்சர்கள் ஆலோசனை!ஹோர்முஸ் நீரிணை அருகே 1,600 கி.மீ. தாக்கி அழிக்கும் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்! ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்!
/

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: கமல்ஹாசன் எம்.பி.

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

News image

கமல்ஹாசன்

கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ் ’தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: இந்திய எண்ணெய் கிடங்குக்கு வரப்போகும் ஆபத்து புரியாதவா்கள் இந்தப் போரை ஆதரிப்பது அவா்களின் அறியாமையைக் காட்டுகிறது. போரைப் பற்றி கவலைப்படாத பெரு நிறுவனங்கள் போல இருந்துவிடக் கூடாது.

போரால் பயிா் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பற்றி மத்திய அரசு சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 சதவீத உரம் சீனாவிலும், சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. எனவே, இப் பிரச்னைக்குத் தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். நான் இந்தியாவின் பக்கம் உள்ளேன் என அப் பதிவில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளாா்.