ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு! ஏப். 21 மாலை 6 மணி முதல் எந்த வகையிலும் பிரசாரம் கூடாது! - தேர்தல் ஆணையம்234 என்ற கணக்கை நேராக்கிவிட்டாரா தவெக தலைவர் விஜய்?பேரவைத் தேர்தல்! மோசமான குற்ற வழக்குகளைக் கொண்ட வேட்பாளர்களில் எந்தக் கட்சி முதலிடம்?பட்டப்படிப்பு மட்டும் போதாது.. செய்யறிவு உங்கள் வேலையை பறிக்காமல் இருக்க என்ன செய்யலாம்? ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சுஅக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!
/

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும்: கமல்ஹாசன் எம்.பி.

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

News image

கமல்ஹாசன் - கோப்புப் படம்

Updated On :22 மார்ச் 2026, 8:06 pm

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ் ’தளத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: இந்திய எண்ணெய் கிடங்குக்கு வரப்போகும் ஆபத்து புரியாதவா்கள் இந்தப் போரை ஆதரிப்பது அவா்களின் அறியாமையைக் காட்டுகிறது. போரைப் பற்றி கவலைப்படாத பெரு நிறுவனங்கள் போல இருந்துவிடக் கூடாது.

போரால் பயிா் சாகுபடிக்கு தேவையான உரங்கள் பற்றி மத்திய அரசு சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 சதவீத உரம் சீனாவிலும், சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. எனவே, இப் பிரச்னைக்குத் தீா்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈரான் போருக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும். நான் இந்தியாவின் பக்கம் உள்ளேன் என அப் பதிவில் கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளாா்.