புதுச்சேரியில் விஜய்யின் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதிகோரி சட்டம்-ஒழுங்கு கண்காணிப்பாளரிடம் தவெக மனு அளித்துள்ளனர்.
புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம் தேதியில் சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பணிகளில் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. மேலும், தேர்தல் பிரசாரத்தில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மேற்கொள்ளவிருக்கும் தேர்தல் பிரசாரத்துக்கு அனுமதிகோரி, மாநில சட்டம் - ஒழுங்கு முதுநிலை கண்காணிப்பாளரிடம் தவெக சார்பில் மனு அளித்துள்ளனர்.
மனுவின்படி, ஏப்ரல் 5 ஆம் தேதியில் புதுச்சேரியில் காலாப்பட்டு நுழைவாயில், முதியால்பேட்டை மணிகுண்டு, அதிதி ஹோட்டல் சந்திப்பு, உப்பளம் வாட்டர் டேங்க் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் பிரசாரம் மேற்கொள்ளவிருக்கிறார்.
முன்னதாக, தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, பெரம்பூர் தொகுதியில் மார்ச் 28 ஆம் தேதியில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறையில் அனுமதி கோரியிருந்தனர். ஆனால், 300 பேர் மட்டுமே கூடுவதற்கு உகந்த இடத்தில் 3,000 பேருக்கு அனுமதி தர முடியாது என தவெகவின் பிரசாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Summary
TVK Petitions for Permission for Vijay's Campaign in Puducherry!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாடு தேர்தல்! தவெக வெற்றிபெற்றது எப்படி?

பொன்னேரி, அண்ணாநகரில் விஜய் இன்று பிரசாரம்!

நெல்லையில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
விஜய் பிரசாரத்திற்கு போதிய பாதுகாப்பு இல்லை! தேர்தல் அதிகாரியிடம் தவெக புகார்!!
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

