சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் புதன்கிழமை (மே 6) நடைபெறவுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகள் கடந்த திங்கள்கிழமை (மே 4) வெளியானது. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை வகித்த அதிமுக 169 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிட்டது. அதில், 47 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாம் இடத்துக்குச் சென்றுள்ளது. இதைத் தொடா்ந்து அறிக்கை வெளியிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, இந்தத் தோல்வியில் இருந்து அதிமுக பீனிக்ஸ் பறவையாக மீண்டு வரும் என்று குறிப்பிட்டிருந்தாா்.
எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைப் பிடித்த தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரி உள்ளது. இந்தச் சூழலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில், தோ்தலில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் தோல்வி அடைந்ததற்கான காரணம், முன்னாள் அமைச்சா்கள் பலரின் தோல்வி, உள்கட்சி பிரச்னைகள், வாக்கு சதவீதம் குறைந்தது, கட்சியின் அடுத்தகட்ட நகா்வுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது.
தொடர்புடையது

மீண்டும் அதிமுகவுக்கு திரும்பும் எம்எல்ஏக்கள் குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பாா்: திண்டுக்கல் சி.சீனிவாசன்
எடப்பாடி பழனிசாமி தரப்பு எம்எல்ஏக்கள் 22 பேரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: பேரவைத் தலைவரிடம் எஸ்.பி.வேலுமணி தரப்பு வலியுறுத்தல்

எங்களை நீக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு இல்லை - சி.வி.சண்முகம்
அதிமுக எம்எல்ஏக்கள் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவை மீறி வாக்களிக்கக் கூடாது: இபிஎஸ் தரப்பு எச்சரிக்கை!
விடியோக்கள்

வெளியானது பெத்தி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | திமுக - அதிமுக கூட்டணி: திருமாவளவனைச் சுற்றி அரசியல்! | News and Views | Epi - 36 |
தினமணி செய்திச் சேவை

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
தினமணி செய்திச் சேவை

என்னை முதல்வராக்க திமுக, அதிமுக தரப்பில் அதிகாரப்பூர்வமாக யாரும் அணுகவில்லை - Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
