சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்றும் என்ன முடிவு எடுத்தாலும் உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும் எனவும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் இன்று (மே 7) நடைபெற்றது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இன்னொரு தேர்தலுக்கு தமிழ்நாடு தயாராக இல்லை, அரசியல், நிர்வாக நிலைமைகளை ஆராய்ந்து அவசர முடிவுகளை உடனடியாக எடுக்கும் அதிகாரத்தை மு.க.ஸ்டாலினுக்கு வழங்குவது உள்ளிட்ட 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில் கூட்டத்தில் பேசிய மு.க. ஸ்டாலின், கட்சியின் நலன் கருதி மூத்த நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது என்றும், என்ன முடிவெடுத்தாலும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கட்டுப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், வரும் 10 ஆம் தேதி வரை திமுக எம்.எல்.ஏக்கள் சென்னையிலேயே இருக்கவும் அறிவுறுத்தியுள்ளார்.
திமுகவின் திட்டங்கள் தொடர்ந்தால்தான் தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும் என்றும் சிறப்பான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
யாரையும் காப்பாற்றும் முயற்சி வேண்டாம்! என்மேல் குறை சொன்னாலும் பரவாயில்லை! மு.க. ஸ்டாலின்

தேர்தல் தோல்வி: கள ஆய்வுக் குழுவுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடன் கமல்ஹாசன் சந்திப்பு!

தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின்
விடியோக்கள்

வெளியானது 'தி ரேஜ்' லிரிக் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியானது பிளாஸ்ட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக அரசுக்கு 6 மாதங்கள் அவகாசம் கொடுங்கள்: கமல்ஹாசன் | CM Vijay | Kamal Haasan |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | சிஎஸ்கே பிளே ஆஃப் செல்ல என்னென்ன வாய்ப்புகள் உள்ளன? | Chennai Super Kings | CSK vs SRH |
தினமணி செய்திச் சேவை

