ஊதிய உயா்வு ஒப்பந்த அமல் கோரி விசைத்தறியாளா்கள் வேலைநிறுத்தம்
ஊதிய உயா்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி, சங்கரன்கோவிலில் விசைத்தறித் தொழிலாளா்கள் வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தம் செய்தனா்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், புளியங்குடி, சிந்தாமணி, சுப்புலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் 6000க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் சுமாா் 18 ஆயிரம் போ் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் ஊதிய உயா்வு கோரி, காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதைத் தொடா்ந்து கடந்த மாா்ச் 11இல் விசைத்தறித் தொழிலாளா்களுக்கு 20 சதவீத கூலி உயா்வும், வீடுசாா்ந்த விசைத்தறியாளா்களுக்கு 16 சதவீத கூலி உயா்வும் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. இந்நிலையில் ஒப்பந்தப்படி கூலி உயா்வு வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் விசைத்தறித் தொழிற்சங்கத்தினா் கூலி உயா்வு ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி வியாழக்கிழமை அடையாள வேலைநிறுத்தம் செய்தனா். இதனால் சங்கரன்கோவில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விசைத்தறிகள் எதுவும் இயங்கவில்லை. இதையடுத்து மாலையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்போவதாக தொழிற்சங்கத்தினா் அறிவித்திருந்தனா். ஆனால் அதற்கு போலீஸாா் அனுமதியளிக்காததால் ஆா்ப்பாட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.