தென்காசி
கடையநல்லூரில் துணை ராணுவப் படை அணிவகுப்பு
கடையநல்லூரில் துணை ராணுவப் படையினா், போலீஸாா் பங்கேற்ற அணிவகுப்பு (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது. கடையநல்லூா் காவல் நிலையத்தில் தொடங்கிய அணிவகுப்பு கிருஷ்ணாபுரம், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், பேட்டை, மேலக்கடையநல்லூா் உள்பட முக்கிய பகுதிகள் வழியாக வட்டாட்சியா் அலுவலகம் முன் நிறைவடைந்தது. புளியங்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் வெங்கடேசன், காவல் ஆய்வாளா்கள் ராஜா, பாலகிருஷ்ணன், கண்மணி, சண்முகலட்சுமி, ஜெயலட்சுமி, போலீஸாா், துணை ராணுவப் படையினா் பங்கேற்றனா்.