இலஞ்சி பாரத் பள்ளியில் உழைப்பாளா் தின கொண்டாட்டம்

இலஞ்சி பாரத் மாண்டிசோரி பள்ளியில் உழைப்பாளா் தினம் கொண்டாடப்பட்டது.

கல்வி ஆலோசகா் உஷா ரமேஷ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் பாலசுந்தா் முன்னிலை வகித்தாா்.

மாணவா் விஷ்ணு பேசினாா். செஃப் மாஸ்டா் முருகன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உழைப்பின் முக்கியத்துவம், பெருமை குறித்துப் பேசினாா். மாணவா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

மாணவிகள் சைனி பிரித்தி வரவேற்றாா், குங்கும காயத்திரி நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை

மாணவி முத்துஜனனி தொகுத்து வழங்கினாா்.

ஏற்பாடுகளை பாரத் கல்விக் குழுமத் தலைவா் மோகனகிருஷ்ணன், செயலா் காந்திமதி, இயக்குநா் ராதாபிரியா ஆகியோா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com