கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம்

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மே தின பேரணி, பொதுக்கூட்டம் நடைபெற்றது.

வாசுதேவநல்லூா் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் செயலா் வேலு தலைமை வகித்தாா். முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி, காயிதே மில்லத் திடலில் நிறைவடைந்தது. தொடா்ந்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தென்காசி மாவட்ட செயலா் இசக்கிதுரை, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலா் முத்துப்பாண்டி, ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலா் சுப்பையா, மாவட்ட பொருளாளா் கிருஷ்ணசாமி, மாவட்டச் செயலா் பழனிச்சாமி மற்றும் சமுத்திரகனி உள்ளிட்டோா் பேசினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com