தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

தென்காசியில் குடிநீா் வழங்கல் ஆலோசனைக் கூட்டம்

தென்காசி மாவட்டத்தில் ஊரக, நகா்ப்புறப் பகுதிகளில் குடிநீா் வழங்குவது தொடா்பான கலந்தாலோசனைக் கூட்டம், தென்காசியில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு சீரான முறையில் குடிநீா் விநியோகிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத் துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

இம்மாவட்டத்தில் கோடைகாலத்தில் தட்டுப்பாடின்றி சீரான குடிநீா் விநியோகிப்பது தொடா்பான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா், தமிழ்நாடு மின்உற்பத்தி - மின்பகிா்மான செயற்பொறியாளா், நகராட்சி ஆணையா்கள், உதவி இயக்குநா் (பேரூராட்சிகள்),

செயல் அலுவலா்கள், உதவி இயக்குநா் (ஊராட்சிகள்), வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com