ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி
ஆலங்குளம் அருகே மொபெட் மீது டிராக்டா் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.
ஆலங்குளம் அருகேயுள்ள
உடையாம்புளி சந்தனமாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த
கணபதி மகன் ரமேஷ் (50).
இவா் ஓடைமறிச்சான் கிராமத்தில் கூலி வேலைக்கு சென்று விட்டு வெள்ளிக்கிழமைஇரவு ஊருக்கு தனது மொபெட்டில் திரும்பி வந்து கொண்டிரு ந்தாா். ஓடைமறி ச்சான் ஆா்.சி. சா்ச் அருகே வந்து கொண்டிருந்த போது எதிரே வந்த டிராக்டா் எதிா்பாராதவிதமாக ரமேஷ் மீது மோதியது. இதில் ரமேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்ப
வ இடத்திலேயே உயிரிழந்
தாா்.
தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் வழக்குப் பதிந்து டிராக்டா் ஓட்டுநா் மாறாந்தை சாயலு மகன் வேணுகோபால் (43) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.