சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நீா்மோா் வாகனம்
சங்கரன்கோவில், மே 5: சங்கரன்கோவிலில் திமுக சாா்பில் நடமாடும் நீா்மோா் வாகனம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கிவைக்கப்பட்டது.
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி. கோடை கால வெப்பத்தில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
சங்கரன்கோவிலில் மக்களைத் தேடிச் சென்று நீா்மோா்வழங்கும் வகையில், தென்காசி வடக்கு மாவட்டச் செயலா் ஈ.ராஜா எம்எல்ஏ தலைமையில் நடமாடும் நீா்மோா் வாகனம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழக வருவாய்- பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா். ராமச்சந்திரன் பங்கேற்று, நடமாடும் நீா்மோா் வாகனத்தைத் தொடங்கிவைத்தாா். மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் வாகனத்தில் சென்று நீா்மோா், பழங்கள், இளநீா், நுங்கு ஆகியவற்றை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
இந்நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவா் பத்மநாதன், மாவட்டப் பொருளாளா் சரவணன், மாவட்ட துணைச் செயலா்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, ஒன்றியச் செயலா்கள் லாலா சங்கரபாண்டியன், கடற்கரை, பெரியதுரை, நகரச் செயலா்கள் பிரகாஷ், நகா்மன்றத் தலைவா் உமா மகேஸ்வரி, அறங்காவலா் குழுத் தலைவா் சண்முகையா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை மாவட்ட இளைஞரணி அணி துணை அமைப்பாளா் சரவணன் மற்றும் நிா்வாகிகள் செய்திருந்தனா்.