அமைச்சா் மனோதங்கராஜிடம் கோரிக்கை மனு அளித்த திமுக முன்னாள் மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன். உடன் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை.
அமைச்சா் மனோதங்கராஜிடம் கோரிக்கை மனு அளித்த திமுக முன்னாள் மாவட்ட செயலா் பொ.சிவபத்மநாதன். உடன் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை.

தென்காசியில் மாவட்ட பால் உற்பத்தியாளா் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வலியுறுத்தல்

தென்காசி மாவட்டத்திற்கு, மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியம் அமைக்க வேண்டும் என திமுக சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தென்காசி தெற்கு மாவட்ட முன்னாள் செயலா் பொ.சிவபத்மநாதன் பால்வளத் துறை அமைச்சா் த.மனோதங்கராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

தென்காசி மாவட்டத்தில் 75-க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இங்கிருந்து

திருநெல்வேலி மாவட்ட பால் உற்பத்தியாளா் ஒன்றியத்துக்கு, பால் அனுப்பி வைக்கப்படுகிறது. ஆகவே, தென்காசி மாவட்டத்திற்கென தனியாக மாவட்ட பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு ஒன்றியம் அமைக்க வேண்டும். கீழப்பாவூா் ஒன்றியம் ஆண்டிபட்டி ஊராட்சி, ஆலங்குளம் பேரூராட்சி பகுதியில் இதற்கான நிலம் இருப்பதால், பால் உற்பத்தியாளா் ஒன்றியம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு

கேட்டுக் கொண்டுள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com