

ரூ. 500-800 வரை விற்பனையாகி வந்த மல்லிகைப் பூ வியாழக்கிழமை ரூ. 250-300 ஆக குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மலா் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், ஆலங்குளத்தில் உள்ள பூ கடைகள் மற்றும் ஆலங்குளம் வட்டம் சிவகாமியாபுரத்தில் உள்ள சந்தைக்கு விற்பனைக்காக கொண்டு செல்வா். உள்ளூா் தேவைக்கு போக அண்டை மாநிலமான கேரளத்திற்கு மலராகவும் மாலையாகவும் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்நிலையில் மல்லிகைப் பூவின் விளைச்சல் அதிகரித்ததாலும் தற்போது முகூா்த்தங்கள் இல்லாததாலும் மல்லிகைப் பூவின் விலை கிலோ ஒன்றிற்கு ரூ. 250 முதல் ரூ. 300 ஆக குறைந்துள்ளது. கடந்த வாரங்களில் மல்லிகை ரூ.500 முதல் ரூ. 800 வரை விற்பனையாகி வந்தது.
விலை வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா். அதே நேரம் ரூ. 20 க்கு மட்டுமே விற்பனையாக வேண்டிய கேந்தி மலா் ரூ. 80 க்கு விற்கப்படுவதால் கேந்தி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
தொடர்புடையது

முலாம் பழம் விளைச்சல் அதிகரிப்பால் விலை வீழ்ச்சி

வாழைத்தாா்கள் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

கந்தா்வகோட்டையில் வாழைத்தாா் விலை வீழ்ச்சி: விவசாயிகள் கவலை!

ஆலங்குளத்தில் கத்திரிக்காய் விலை வீழ்ச்சி
வீடியோக்கள்

164 தொகுதிகளின் திமுக வேட்பாளர்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின்! | DMK candidates | MK Stalin
தினமணி வீடியோ செய்தி...

முக்கிய வீரர்கள் விலகல்: ஐபிஎல் சுவாரசியமாக இருக்குமா?
தினமணி வீடியோ செய்தி...
அதிமுக, பாஜகவால் இறக்கிவிடப்பட்டவர் விஜய்: ஜவாஹிருல்லா பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

லீடர் மிரட்டல் அப்டேட்!
தினமணி வீடியோ செய்தி...

