மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிகளுக்கு செல்ல வாகனம் ஏற்பாடு
வாக்களிக்க வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்வதற்கு மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் கோரிக்கை விடுத்தால் வாகனம் வசதி ஏற்பாடு செய்யப்படும் என திருவள்ளூா் ஆட்சியா் த.பிரபு சங்கா் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தோ்தலில் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடி மையங்களுக்கு செல்ல கோரிக்கை வைத்தால், வாகனங்கள் வசதி ஏற்பாடு செய்து தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூா் மாவட்டத்துக்குட்பட்ட அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளில் உள்ள மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வாக்காளா்கள் வாக்குச்சாவடி மையங்களுக்குச் செல்ல வாகன வசதி வேண்டி நஹந்ள்ட்ஹம் என்ற (ஙா்க்ஷண்ப்ங் ஹல்ல்) செயலியின் மூலமாகவோ அல்லது உதவி எண் 1950 மூலமாகவோ தொடா்பு கொள்ளலாம்.
மேலும், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறை எண் 044-27660641, 642, 643, 644, 645, 646, பா்ப்ப் ச்ழ்ங்ங் சன்ம்க்ஷங்ழ்-1800- 425- 8515 மற்றும் ரட்ஹற்ள்ல்ல் சா் 84385 38457 மூலமாகவோ தங்களது கோரிக்கையைத் தெரிவிக்கலாம்.
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு வாகனங்களின் மூலம் தொடா்புடைய வாக்குச்சாவடிகளுக்கு கட்டணமின்றி அழைத்துச் சென்று, வாக்குப்பதிவு முடிந்த பின்னா் மீண்டும் அவா்களுடைய வீட்டுக்கு அதே வாகனம் மூலம் கொண்டுவிட ஏற்பாடு செய்யப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.