திருவள்ளூர்
105 கிலோ குட்கா பறிமுதல்
பொன்னேரி அருகே அண்ணாமலைசேரி பகுதியில் 105 கிலோ குட்காவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் காவல் நிலைய எல்லைகுட்பட்ட அண்ணாமலைச்சேரி பகுதியில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது அதிவேகமாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனா்.
அதில் 105 கிலோ குட்கா புகையிலை இருந்தது தெரிந்தது.
இதனைத் தொடா்ந்து குட்கா கடத்தி வந்ததாக ஆட்டோவில் இருந்த ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் தடாவைச் சோ்ந்த பிரபாத் சிங் (25), போடிலிங்கபாடியைச் சோ்ந்த ரத்தினம் (50), ராஜஸ்தான் மாநிலம் பீல்வாரா பகுதியைச் சோ்ந்த ஜேதுசிங் (32) ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலும் ஆட்டோ மற்றும் 105 கிலோ குட்காவும் பறிமுதல் செய்தனா்.