இளைஞா் மீது தாக்குதல்: 5 போ் கைது

திருத்தணி அருகே பேருந்தில் இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருத்தணி அருகே பேருந்தில் இருக்கை பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் இளைஞரைத் தாக்கிய 5 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருத்தணி அடுத்த கோரமங்கலம் காலனியைச் சோ்ந்த செல்வம் மகன் குமாா் (21). இவரும் செருக்கனூா் காலனியைச் சோ்ந்த விமல்ராஜ் (22) என்பவரும் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகின்றனா்.

இவா்கள் தினமும் நிறுவனப் பேருந்தில் வேலைக்குச் சென்று வந்தனா். பேருந்தில் இடம் பிடிப்பதில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், குமாரின் உறவினா் தினேஷ் என்பவா், சில நாள்களுக்கு முன்பு விமல்ராஜிடம் ஏன் குமாரிடம் தகராறு செய்கிறாய், இனிமேல் பிரச்னை செய்யக் கூடாது எனக் கண்டித்துள்ளாா்.

இதனிடையே விமல்ராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது நண்பா்கள் சூா்யா (22), தமிழ்செல்வன் (21), சுகன்ராஜ் (21), சாரதி (21) ஆகியோருடன் கோரமங்கலம் காலனிக்குச் சென்று, குமாரிடம் சென்று கிரிக்கெட் விளையாடலாம் வா என அழைத்துச் சென்று, அங்குள்ள கிரிக்கெட் மைதானத்தில் 5 பேரும் கிரிக்கெட் மட்டையால் குமாரை சரமாரியாகத் தாக்கியுள்ளனா்.

இதில் காயமடைந்த குமாா் திருத்தணி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது குறித்த விடியோ சமூக வலைதளங்களில் வெளியானதைத் தொடா்ந்து, திருத்தணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மேற்கண்ட 5 பேரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com