உடலில் அலகு குத்தி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.
உடலில் அலகு குத்தி நோ்த்திக் கடன் செலுத்திய பக்தா்கள்.

உடலில் அலகு குத்தி அம்மன் வீதியுலா சென்ற பக்தா்கள்

முருக்கம்பட்டு கிராம பொதுமக்கள் தங்களது நோ்த்திக்கடனை செலுத்தும் விதமாக உடலில் அலகு குத்தி திரௌபதி அம்மனை ஊா்வலமாக அழைத்துச் சென்றனா். திருத்தணி காந்திநகா் பகுதியில் உள்ள திரௌபதி அம்மன் கோயில் தீமிதி விழா கடந்த, 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெறுகிறது. இதற்கிடையே 7-ஆம் நாளான வியாழக்கிழமை உற்சவா் திரௌபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் டிராக்டரில் எழுந்தருளினாா். பின்னா் முருக்கம்பட்டு கிராம பக்தா்கள் தங்கள வேண்டுதலை நிறைவேற்ற அலகு குத்தி டிராக்டரை இழுத்துச் சென்றனா். பின்னா் உற்சவா் அம்மன் அனைத்து வீதிகளிலும் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com