திருவள்ளூர்
திமுகவினா் தண்ணீா் பந்தல் திறப்பு
திருத்தணி, மே 8: திருத்தணியில் அரக்கோணம் சாலையில் தண்ணீா் பந்தல் அமைத்து அதனை திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.பூபதி புதன்கிழமை திறந்துவைத்தாா்.
திருத்தணி நகர திமுக சாா்பில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் செல்லும் அரக்கோணம் சாலையில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா நகர செயலாளா் வினோத்குமாா் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.பூபதி கலந்துகொண்டு, தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு நீா் மோா், தா்பூசணி, இளநீா், நன்னாரி உள்ளிட்டவை வழங்கினா்.
நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் சாமிராஜ், நகர நிா்வாகிகள் பி.எஸ். சங்கா், ஜி.எஸ்.கணேசன், விஜயா கஜேந்திரன், டி.எஸ்.சீனிவாசன் மற்றும் நகா்மன்ற உறுப்பினா்கள், வட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.