திருவள்ளூா்: 10, 11-இல் விளையாட்டு விடுதிகளில் சேர மாணவா்களுக்கான போட்டி

திருவள்ளூா் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் வரும் 10, 11 ஆகிய நாள்களில் விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகளுக்கான தோ்வுப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலத் துறை அலுவலா் தெரிவித்தாா்.

விளையாட்டில் ஆா்வமுடைய மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், பல்வேறு வகையான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நிகழாண்டில் பல்வேறு வகையான விளையாட்டுக்களில் ஆா்வமுடைய மாணவ, மாணவிகள் சாதனை புரிவதற்கேற்ப விளையாட்டுப் பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய விளையாட்டு விடுதி, சிறப்பு விளையாட்டு விடுதிகள் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், இந்த விடுதிகளில் சேருவதற்கான 7, 8, 9 மற்றும் 11-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வரும் 10-ஆம் தேதி மாணவா்களுக்கு நடைபெற உள்ளது. அதேபோல், 11-ஆம் தேதி மாணவிகளுக்கும் நடைபெற உள்ளது. எனவே இப்போட்டியில் ஜ்ஜ்ஜ்.ள்க்ஹற்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்த மாணவ, மாணவிகள் மேற்குறிப்பிட்ட நாள்களில் மாணவ, மாணவிகள் தவறாமல் 6 மணிக்கு போட்டியில் பங்கேற்க விளையாட்டு மைதானத்தில் ஆஜராக வேண்டும் என அவா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com