டோக்யோ: ஜப்பானின் உலகப்புகழ் பெற்ற கேமரா தயாரிப்பு நிறுவனமான பியூஜிபிலிம் 'எக்ஸ்- ப்ரோ 3' என்னும் உலகின் முதல் 'கண்ணாடியில்லாத கேமரா'வை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
எங்களது புதிய அறிமுகமான எக்ஸ்- ப்ரோ 3 வகை கேமராவானது உலகிலேயே முதன்முறையாக டைடானியத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள டிஜிட்டல் கேமரா ஆகும்.
இதன்மூலம் அந்த கேமராவானது பயன்படுத்துவதற்கு இலகுவானதாக அமைந்து பயனாளர்களுக்கு இனிய அனுபவத்தை வழங்குகுகிறது. அத்துடன் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள 'அட்வான்ஸ்ட் ஹைபிரிட் வியூபைண்டர்' வசதியானது 'ஆப்டிகல் வியூபைண்டர்' மற்றும் 'எலெக்ட்ரானிக் வியூபைண்டர்' இடையே மாற்றிக் கொள்ளும் வசதியை அளிக்கிறது.
இந்திய சந்தையில் இந்த கேமராவின் அறிமுக விலையாக ரூ. 1,55,999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.