இந்தியாவில் அலைவரிசை குறைவாக இருக்கும் பகுதிகளில் வெற்றிகரமாக ஈரோஸ் நவ் சேவையை அளிக்கப்பட்டுள்ளதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாஃப்ட் அஸூர் மற்றும் ஈரோஸ் நவ் இணைந்து இந்தியாவில் அலைவரிசை குறைவாக இருக்கும் பகுதிகளில் ஈரோஸ் நவ் சேவையை குறைந்த அலைவரிசையை கொண்டு அளித்துள்ளது.
இதுகுறித்து அஸூர் நிறுவன துணைத் தலைவர் ரவி கிருஷ்ணசுவாமி கூறுகையில்,
“இந்தியா முழுவதும் குறைந்த அலைவரிசை இடங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பும் உள்ளடக்கத்தை அணுக உதவுவதன் மூலம், நாங்கள் சில்லறை விநியோக வாய்ப்புகளை விரிவுபடுத்த முடியும்” என தெரிவித்தார்.
ஈரோஸ் நவ் பதிவேற்றும் விஷயங்களை மைக்ரோசாஃப்ட் அஸூரின் மைய களஞ்சியத்தில் இருந்து மற்ற விநியோக மையங்களுக்கு அனுப்பி விரைவாக செயல்படுத்தி வருகிறோம்.
இணைய இணைப்பு இல்லாமல் நுகர்வோர் தங்கள் மொபைல் சாதனங்களில் உள்ளடக்கத்தை பாதுகாப்பாக பதிவிறக்கம் செய்ய விநியோக மையங்கள் உதவியாக இருகின்றது.
இந்த முறையைப் பயன்படுத்துவதன் மூலம், குறைந்த அலைவரிசை பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்கள் விரைவாக ஈரோஸ் நவ்வை அனுகலாம்.
இதுகுறித்து ஈரோஸ் நவ் தலைமை நிர்வாக அதிகாரி அலி ஹுசைன் கூறுகையில்,
“மைக்ரோசாஃப்டின் கிளவுடை பயன்படுத்துவதன் மூலம் அலைவரிசை குறைவாக உள்ள பகுதிகளில் வாடிக்கையாளர்களை விரைவாக அனுக முடிகிறது. இதன்மூலம் சந்தை தேவைகளை பூர்த்தி செய்து தொடர்ந்து சேவையை அளிக்க முடிகிறது” என தெரிவித்தார்.
எதிர்வரும் மாதங்களில், இந்தியா முழுவதும் உள்ள நுகர்வோர் இந்த சேவையை அணுக முடியும் என்பதை உறுதி செய்வதற்காக நிறுவனங்கள்