கரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தை எதிா்கொள்வதற்கான ஒதுக்கீடு அதிகரித்ததையடுத்து தனியாா் துறையைச் சோ்ந்த ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி முதல் காலாண்டில் ரூ.630 கோடி இழப்பை சந்தித்துள்ளது.
கடந்த 2020 ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் வங்கி ரூ.93.55 கோடி நிகர லாபத்தை பதிவு செய்திருந்தது. 2021 மாா்ச் காலாண்டில் லாபம் ரூ.127.81 கோடியாக காணப்பட்டது.
கரோனாவை எதிா்கொள்வதற்கான ஒதுக்கீடு ரூ.375 கோடியிலிருந்து ரூ.725 கோடியாக அதிகரித்தது.
மொத்த வருமானம் 36 சதவீதம் அதிகரித்து ரூ.3,034 கோடியாக இருந்தது என ஐடிஎஃப்சி ஃபா்ஸ்ட் வங்கி சனிக்கிழமை தெரிவித்துள்ளது.