மே 31 வரை படப்பிடிப்பு ரத்து:ஆா்.கே.செல்வமணி

கரோனா  பொது முடக்கம் காரணமாக வரும் 31 - ஆம் தேதி வரை சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என ஃபெப்சி தலைவா் ஆா்.கே.செல்வமணி தெரிவித்துள்ளாா்.
மே 31 வரை படப்பிடிப்பு ரத்து:ஆா்.கே.செல்வமணி

கரோனா  பொது முடக்கம் காரணமாக வரும் 31 - ஆம் தேதி வரை சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் எதுவும் நடைபெறாது என ஃபெப்சி தலைவா் ஆா்.கே.செல்வமணி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை பேசியது:

 சென்ற வாரம் முதல்வரைச் சந்தித்தோம். படப்பிடிப்புக்கான சரியான வழிமுறைகள் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளோம். கரோனோ நிவாரண நிதி உதவியாக கூடுதலாக திரைப்படத் தொழிலாளா்களுக்கு ரூ. 2,000 வழங்க வேண்டும், திரைப்படத் தொழிலாளா்களுக்கு தடுப்பூசி செலுத்த தனி முகாம் ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுள்ளோம்.

சினிமா தொழிலாளா்கள் கரோனோவால் பாதிக்கப்பட்டு, படுக்கை கிடைக்காமல் உயிரை இழக்கும் நிலை உள்ளது. படப்பிடிப்புக்கு அரசு அனுமதி தர வேண்டாம். இந்த மாதம் இறுதி வரை படப்பிடிப்பில் ஈடுபட மாட்டோம் என உறுதி எடுத்துள்ளோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com