வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (மே 31) பங்குச்சந்தை வணிகம் உயர்வுடன் முடிவடைந்தது. வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் புள்ளிகள் 515 புள்ளிகள் வரை உயர்ந்தது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 514.56 புள்ளிகள் உயர்ந்து 51,937.44 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவுபெற்றது. இது மொத்த வர்த்தகத்தில் இது 1 சதவிகிதம் உயர்வாகும்.
இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 147.15 புள்ளிகள் உயர்ந்து 15,582.80 புள்ளிகளாக வர்த்தகம் முடிவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.95 சதவிகிதம் உயர்வாகும்.