கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,500 கோடி திரட்டிய பிஓஐ

பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (பிஓஐ), கடன் பத்திர வெளியீடு முலம் ரூ.1,500 கோடி நிதி திரட்டியுள்ளது.
கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.1,500 கோடி திரட்டிய பிஓஐ

பொதுத் துறை வங்கியான பேங்க் ஆஃப் இந்தியா (பிஓஐ), கடன் பத்திர வெளியீடு முலம் ரூ.1,500 கோடி நிதி திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரூ.1,500 கோடி மதிப்பிலான பங்குப் பத்திரங்களை வங்கி அண்மையில் வெளியிட்டது. ஒதுக்கீடு செய்ததைப் போல் 12 மடங்கு கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பங்கள் குவிந்தன.

47 ஏலதாரா்கள் ரூ.6,367 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பித்திருந்தனா்.

புதிதாகத் திரட்டப்பட்டுள்ள ரூ.1,500 கோடி நிதி, வங்கியின் வளா்ச்சித் தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com