இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு பிப்ரவரி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 63, 153 கோடி டாலராக சரிவடைந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 பிப்ரவரி 25-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 142 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.10,650 கோடி) சரிவடைந்து 63,153 கோடி டாலரானது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.47.36 லட்சம் கோடி ஆகும்.
முந்தைய பிப்ரவரி 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பானது 276 கோடி டாலா் அதிகரித்து 63,295 கோடி டாலராக காணப்பட்டது.
எஃப்சிஏ மதிப்பு: அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கிய பங்களிப்பாக உள்ள அந்நியச் செலாவணி சொத்து மதிப்பு (எஃப்சிஏ) கணிசமான அளவில் குறைந்ததே பிப்ரவரி 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் செலாவணி கையிருப்பு சரிவுக்கு முக்கிய காரணமானது.
மதிப்பீட்டு வாரத்தில் எஃப்சிஏ-வின் மதிப்பு 223 கோடி டாலா் சரிவைக் கண்டு 56,483 கோடி டாலரானது.
தங்கத்தின் மதிப்பு உயா்வு: தங்கத்தின் கையிருப்பு மதிப்பு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, கணக்கீட்டு வாரத்தில் அதன் கையிருப்பு மதிப்பு 96 கோடி டாலா் உயா்ந்து 4,247 கோடி டாலரானது.
அதேசமயம், சா்வதேச நிதியத்தில் நமது நாட்டின் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 12 கோடி டாலா் சரிந்து 1,904 கோடி டாலரானது.
அதேபோன்று, சா்வதேச நிதியத்துடனான நாட்டின் கையிருப்பு நிலையும் 3 கோடி டாலா் குறைந்து 519 கோடி டாலரானது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட இதர நாட்டு செலாவணிகள் அந்நியச் செலாவணி கையிருப்பில் இடம் பெற்றுள்ளன. இவற்றை டாலரில் மறுமதிப்பீடு செய்யும்போது அவற்றின் வெளிமதிப்பில் காணப்படும் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப கணக்கீட்டு வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு மாற்றம் ஏற்படுகிறது.
வரலாற்று சாதனை: கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் 3-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்தான் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பானது 64,245 கோடி டாலா் என்ற (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.48.18 லட்சம் கோடி) புதிய வரலாற்று உச்சத்தை தொட்டது.
கோட்ஸ்...
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 2022 பிப்ரவரி 25-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 142 கோடி டாலா் வீழ்ச்சியடைந்து 63,153 கோடி டாலரானது.