முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த கோரமண்டல் இண்டா்நேஷனல் கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில் வரிக்கு பிந்தைய தனிப்பட்ட லாபமாக ரூ.183 கோடியை பதிவு செய்துள்ளது. இது, இதற்கு முந்தைய ஆண்டின் இதே காலாண்டில் ஈட்டிய ரூ.156 கோடியுடன் ஒப்பிடும்போது அதிகம்.
இந்த காலகட்டத்தில் வருவாய் ரூ.2,860 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.4,294 கோடியை எட்டியது.
மாா்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த 2021-22-ஆம் நிதியாண்டில் நிறுவனத்தின் தனிப்பட்ட மொத்த வருவாய் ரூ.14,231 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.19,231 கோடியாகவும், வரிக்கு பிந்தைய லாபம் ரூ.1,313 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.1,412 கோடியாகவும் ஆனது என கோரமண்டல் தெரிவித்துள்ளது.