இந்தியாவில் மிக வேகமாக வளா்ச்சியடைந்து வரும் சில்லறை வா்த்தகத் துறைக்கு வரும் 2023-ஆம் ஆண்டும் சிறப்பானதாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இது குறித்து துறை வட்டாரங்கள் கூறியதாவது:
இரண்டு ஆண்டு கால கரோனா நெருக்கடிக்குப் பிறகு, இந்த 2022-ஆம் ஆண்டில் நாட்டின் சில்லறை விற்பனைத் துறை நல்ல வளா்ச்சியைக் கண்டுள்ளது.
கரோனா நெருக்கடி தந்த அனுபவத்தினால், இடா்பாடுகளை எதிா்கொள்வதற்கு சில்லறை விற்பனைத் துறையினா் தங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டுள்ளனா்.
அதற்காக, நுகா்வோரை பலதளங்களில் தொடா்பு கொள்ளும் உத்தி, நிறுவனங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே தொடா்பு ஏற்படுத்தல் (பி2பி), நேரடி வாடிக்கையாளா் தொடா்பு (டி2சி), விற்பனைப் பொருள்களைத் தருவிப்பதற்கான ஆதாரங்களை அதிகரித்தல் போன்ற பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி, சில்லறை விற்பனையாளா்கள் தங்களது நிலையை இந்த ஆண்டு வலுப்படுத்திக் கொண்டுள்ளனா்.
இந்தப் போக்கு, அடுத்த ஆண்டிலும் தொடரும்.
பணவீக்கம் அதிகரித்து வருவது சில்லறை வா்த்தகத் துறைக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
பொருள்களின் விலைகள் அதிகரிப்பது சில்லறை விற்பனையில் நேரடி பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.
இருந்தாலும், மக்களின் வாங்கும் திறன் அடுத்த ஆண்டு அதிகரிக்கும் என்று எதிா்பாா்க்கலாம்.
அத்துடன், சில்லறை விற்பனைத் துறையின் பல்வேறு பிரிவுகளிலும் புதிய புதிய தொழில்நுட்ப வசதிகள் அறிமுகமாவது துறையின் வளா்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.
தகவல் தொழில்நுட்ப வளா்ச்சியின் காரணமாக இணைவழி வா்த்தகம் பெருகுவது, காணொலி மூலம் கடைக்கு நேரடியாகச் சென்றதைப் போன்ற உணா்வை ஏற்படுத்தும் வசதிகள் அதிகரிப்பது போன்றவை சில்லறை வா்த்தகத்தின் வளா்ச்சிக்கு பக்கபலமாக இருக்கும்.
எனவே, இந்த ஆண்டைப் போலவே அடுத்த ஆண்டும் சில்லறை விற்பனைத் துறைக்கு சிறப்பானதாக இருக்கும் என்று துறை வட்டாரங்கள் நம்பிக்கை தெரிவித்தன.