முருகப்பா குழுமத்தைச் சோ்ந்த சாந்தி கியா்ஸ் நிறுவனம், கடந்த 2021-22-ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருவாய் 56 சதவீதம் அதிகரித்து ரூ.337.1 கோடியை எட்டியுள்ளது. நான்காவது காலாண்டில் மட்டும் நிறுவனத்தின் வருவாய் 44 சதவீதம் உயா்ந்து ரூ.103.6 கோடியானது. நிகர லாபம் 111 சதவீதம் உயா்ந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் வரிக்கு முந்தைய லாபம் 125 சதவீதம் வளா்ச்சி கண்டு ரூ.58.7 கோடியாக காணப்பட்டது. நான்காவது காலாண்டில் இது 12.3 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.18.7 கோடியானது.
கடந்த நிதியாண்டில் ரூ.386 கோடி மதிப்பிலான ஆா்டா்களை நிறுவனம் பெற்றது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் 27 சதவீதம் அதிகம் என சாந்தி கியா்ஸ் தெரிவித்துள்ளது.