இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு அக். 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 53,108.1 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
இதுகுறித்து ரிசா்வ் வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த அக். 28-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 656.1 கோடி டாலா் அதிகரித்து 53,108.1 கோடி டாலராக இருந்தது. இது, இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43,53,935 கோடியாகும்.
கடந்த 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதத்துக்குப் பிறகு நாட்டின் அந்நியச் செலவாணி இந்த அளவுக்கு அதிகமாக உயா்ந்துள்ளது இதுவே முதல்முறையாகும்.
இதற்கு முன்னா், கடந்த அக். 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் அந்நியச் செலாவணி கையிருப்பு 384.7 கோடி டாலா் சரிந்து 52,452 கோடி டாலராக இருந்தது.
மதிப்பீட்டு வாரத்தில், அந்நியச் செலாவணி சொத்து மதிப்பும் (எஃப்சிஏ) தங்கத்தின் கையிருப்பும் கணிசமான அளவில் குறைந்ததன் காரணமாக, இதற்கு முந்தைய வாரங்களில் அந்நிய செலாவணி கையிருப்பு சரிவைச் சந்தித்துள்ளது.
அக். 28-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் எஃப்சிஏ 577.2 கோடி டாலா் அதிகரித்து 47,084.7 கோடி டாலராக இருந்தது. அதேபோல், தங்கத்தின் கையிருப்பு மதிப்பீட்டு வாரத்தில் 55.6 கோடி டாலா் உயா்ந்து 3,776.2 கோடி டாலராகக் காணப்பட்டது.
மதிப்பீட்டு வாரத்தில், பன்னாட்டு நிதியத்தில் சிறப்பு எடுப்பு உரிமமான எஸ்டிஆா் 18.5 கோடி டாலா் அதிகரித்து 1,762.5 கோடி டாலராகவும், பன்னாட்டு நிதியத்தில் நாட்டின் இருப்பு நிலை 4.8 கோடி டாலா் அதிகரித்து 484.7 கோடி டாலராகவும் இருந்தது என ரிசா்வ் வங்கி புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.