வாரத்தில் நான்கு நாள்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்திற்கு இங்கிலாந்தைச் சேர்ந்த 100 நிறுவனங்கள் முதல்கட்டமாக ஒப்புதல் அளித்துள்ளன.
பணி நாள்கள் குறைக்கப்பட்டதால், ஊதியம் உள்ளிட்ட ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகள் குறைக்கப்படாது என நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. மாறாக ஊழியர்களின் பணிபுரியும் திறன் மேம்படும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளன.
இங்கிலாந்தில் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களான ஆட்டோம் வங்கி, உலகளாவிய சந்தைப்படுத்துதல் நிறுவனமான ஏவின் உள்ளிட்ட பெரு நிறுவனங்கள் வாரத்தில் 4 நாள்கள் மட்டுமே பணிபுரிய அனுமதி அளித்துள்ளன. அந்த நிறுவனங்களில் தலா 450 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
முதல்கட்டமாக 100 நிறுவனங்கள் 4 நாள்கள், பணிநாள்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளன. இதன் 2,600 ஊழியர்களின் பணி நாள்கள் 4 நாள்களாக குறைய வாய்ப்புள்ளது. ஊழியர்களின் பணிநாள்கள் குறைக்கப்படுவதால், ஊழியர்களின் பணிபுரியும் திறன் அதிகரித்து, நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய பங்களிக்கும் என நம்புவதாக பெருநிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஊழியர்களின் உற்பத்தித் திறன் அதிகரிப்பதால், சில மணி நேரங்களின் வித்தியாசத்திலேயே நிர்ணயிக்கப்பட்ட பணிகளை முடிக்க நேருவதாகவும், ஊழியர்களைத் தக்கவைக்க இது சிறந்த முறை என்றும் அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரே நாளில் 2 முறை குறைந்த தங்கம் விலை

பஞ்சாப் சரக்கு ரயில் வழித் தடங்களில் ‘ட்ரோன்’ மூலம் கண்காணிப்பு: ரயில்வே அமைச்சகம்

தில்லியில் மழையுடன் கூடிய கடும் வெப்பம்: வழக்கத்திற்கு மாறான ஏப்ரல் வானிலை

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


