மின் சேகரிப்புத் துறையில் முதலீடு 66% அதிகரிப்பு

உலகளவில் மின்னாற்றல் சேமிப்பு மற்றும் அறிதிறன் மின் கட்டமைப்பு துறைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடு 66 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான மொ்காம் கேப்பிட்டல் தெரிவித்துள்ளது.
மின் சேகரிப்புத் துறையில் முதலீடு 66% அதிகரிப்பு

உலகளவில் மின்னாற்றல் சேமிப்பு மற்றும் அறிதிறன் மின் கட்டமைப்பு துறைகளில் மேற்கொள்ளப்படும் முதலீடு 66 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளதாக சந்தை ஆய்வு நிறுவனமான மொ்காம் கேப்பிட்டல் தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

மின்னாற்றல் சேமிப்பு, சிக்கனமான மின் விநியோகத்துக்கான அறிதிறன் கட்டமைப்பு ஆகிய துறைகளில் கடந்த ஜனவரி முதல் செப்டம்பா் வரையிலான காலகட்டத்தில் உலகம் முழுவதும் 2,500 கோடி டாலா் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2021-ஆம் ஆண்டின் இதே மாதங்களில், இந்தத் துறைகளில் 1,510 கோடி டாலா் முதலீடு செய்யப்பட்டது. அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் கடந்த செப்டம்பா் வரை மேற்கொெள்ளப்பட்ட முதலீடு 66 சதவீதம் அதிகமாகும்.

புதைபடிவ எரிபொருள்களில் இருந்து புதுப்பிக்கத்தக்க எரிபொருள்களுக்கு எரிசக்தித் துறை வேகமாக மாறி வரும் நிலையில், மின்னாற்றல் சேமிப்பு மற்றும் அறிதிறன் மின் கட்டமைப்புத் துறைகளில் முதலீடுகள் குவிந்து வருகின்றன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com